கரூர் மாவட்டம், கரூர், மண்மங்களம், புகளூர் போன்ற வட்டங்களுக்கு உட்பட்ட திருமாநிலையூர், அரசு காலனி, ஆத்தூர், பௌத்திரம், சாலப்பாளையம் ஆகிய கிராமங்களில்  கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை களப்பணியாளர்கள் வீடு வீடாக நேரில் சென்று   சரிபார்க்கும் பணியினை ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மேலாய்வு மேற்கொண்டார்கள்.


 





         


இந்த ஆய்வின்போது களப்பணியாளர்கள் மகளிர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதார் எண், மின் கட்டணம் , குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம், சொந்தமாக வைத்திருக்கும் வாகனங்களின் விவரம் மேலும் ஆண்டு வருமானம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அதற்கான தனிச் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இப்பணி  நடைபெற்று வருகிறது.


 




இப்பணிகளை பார்வையிட்டு களப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மனுக்களை விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலை நாள் தோறும் தேர்வு செய்து பணிகளை விரைவாகவும் சரியான விவரங்களையும் செயலியில் பதிவேற்றம் செய்து பயனாளிகளை தேர்வு செய்து  சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


 




இந்நிகழ்வில் கரூர் வருவாய் கோட்டாட்சியர்  ரூபினா, வட்டாட்சியர்கள்  வெங்கடேசன்(கரூர்), குமரேசன்(மண்மங்களம்), முருகன்(புகளூர்) மற்றும் களப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.