Kallakurichi: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். அந்த மாவடட்த்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


11 வருவாய் வட்டாட்சியர்கள் மாற்றம்:


மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,



  • கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராக இருந்த சசிகலா, சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கோபாலக்கிருஷ்ணன்  சங்கராபுரம் தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்

  • சங்கராபுரம் தனி வட்டாட்சியராக இருந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி தனி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த அனந்தகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்

  • உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக இருந்த விஜயபிரபாகரன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த பாலகுரு, வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த குமரன், கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

  • கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக இருந்த அனந்தசயனன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்

  • கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) இருந்த மனோஜ் முனியன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

  • சின்ன சேலம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக இருந்த பிரபாகரன், கள்ளக்குறிச்சி (வன நிர்ணய அலுவலகம்) தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.