24 மணிநேரமாக சுற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயா டிவி தலைமை நிர்வாகி.. என்ன நடந்தது?

கடந்த 24 மணி நேரமாக தற்கொலை முயற்சி, மருத்துவமனையில் கவலைக்கிடம் என சுற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயா டிவியின் தலைமை நிர்வாகியான விவேக் ஜெயராமன்

Continues below advertisement

கடந்த 24 மணி நேரமாக, ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகியான விவேக்கின் மனைவி தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமது மனைவியின் பிறந்தநாளுக்கு, முருகன் கோவிலில் இருவரும் ஒன்றாக தரிசனம் செய்து, பொய்யான பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விவேக்.

Continues below advertisement

ஜெயா டிவி-யின் தலைமை செயலாக்க அதிகாரியான (COO) விவேக் ஜெயராமன், சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான உறவினர். தற்போது ஜெயா டிவி குழுமத்தின் அனைத்து சேனல்களையும் கவனித்து வரும் அவர், சசிகலாவின் பயணங்களிலும் உடன் இருந்து வருகிறார். இந் நிலையில், விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. அதுவும், தற்கொலைக்கு முயன்று, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவின. 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்ற தகவல் மட்டுமே உண்மை. இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்ததும், கை,கால், கண் வைத்து, வதந்தி தீயாக பரவ ஆரம்பித்தது. தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வரை செய்திகள் பரவின. ஆனால், இவை அனைத்துமே தவறு என்பது தற்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வெளியாகவில்லை. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து  சில புகைப்படங்களும் காணொலி காட்சிகளும் தற்போது கிடைத்துள்ளன. 

அதன்படி, ஜெயா டிவி-யின் தலைமை செயலாக்க அதிகாரி விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனாவுக்கு, சிறிய உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார். சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி, இன்று காலை முதல் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரும் அவரது கணவர் விவேக் ஜெயராமனும், இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர்.


இதுதொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காட்சிகளைப் பார்க்கும்போது, விவேக் ஜெயரானின் மனைவி கீர்த்தனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் என்பதும், தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் உள்ளார் என்பதும் முற்றிலும் தவறானவை என்றும் முழுக்க முழுக்க வதந்தி என்பதும் தெளிவாகியுள்ளது. இது திட்டமிட்டு, பரப்பப்படும் வதந்திகள் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என்றும் விவேக் ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமது மனைவியுடன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகளை வெளியிட்டு, தமது மனைவி உடல்நிலை தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயா டிவியின் தலைமை செயலாக்க அதிகாரி விவேக் ஜெயராமன். 

Continues below advertisement
Sponsored Links by Taboola