கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துயினர்  சோதனை நடத்த முயன்றபோது  வருமான ஊழிய வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.





கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லம் மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்த முயன்றனர்.


அப்பொழுது சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின்  சகோதரர் வீட்டில் முன்பு திரண்ட ஏராளமான திமுகவினர் வருமானவரித்துறை பெண் அதிகாரி காயத்ரி மற்றும் வருமான வரி அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கினார். 


இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர்.




தாக்குதலுக்கு  உள்ளான நான்கு வருமான வரித் துறை  அதிகாரிகளும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகினர்.


வருமான வரி சோதனை நடத்த முயன்ற அத்தனை இடங்களிலும் திமுக வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி விடுத்தனர் இதையடுத்து அன்றைய தினம் அனைத்து இடங்களிலும் சோதனை என்பது நடைபெறவில்லை.


தொடர்ந்து மத்திய பாதுகாப்புடன் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக  கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தாந்தோன்றிமலை காவல் நிலையங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
   


இந்த வழக்குகள் அடிப்படையில் நேற்றுவரை  திமுகவினர் மற்றும் தொழிலதிபர்கள் என 15 பேர் கரூர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.




இதில் கரூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் லாரன்ஸ் மற்றும் பூபதி ஆகியோர் உட்பட நேற்று 10 நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது



இந்நிலையில், லாரன்ஸ் சகோதரர் ரீகன் உட்பட  திமுகவை சேர்ந்த 5 நபர்களை இன்று கரூர் நகர காவல் நிலையப் போலீசார் கைது செய்துள்ளனர். வருமானவரித்துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் மேலும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.