சென்னை மயிலாப்பூரில் உள்ள ப்ரிம்ரோஸ் ஹவுஸில் மனிதநேய விருதுகள் 2022  வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. சமூக ஆர்வலரும் அரசியல்வாதியுமான அப்சரா ரெட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், அவர்கள் சிறப்பாக சேவையாற்றிவர்களுக்கு மனிதநேய விருதுகளை வழங்கினர். 




சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது, " குழந்தைகள் எப்பொழுதும் தங்களது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாது. வாழ்க்கை என்பது வாழ்வதற்காக மட்டுமே முடித்து வைப்பதற்கு அல்ல. குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள்  கவனமுடன் கையாள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும். குழந்தைகள் சாதிக்க பிறந்தவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளவே கூடாது."


இவ்வாறு அவர் பேசினார். 


மனித நேயம் விருதுகள் 2022 விருதுகள், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு தொழில் மற்றும் தொழில் திறன்களைக் கண்டறிய விருதுகள் வழங்கப்பட்டன. மருத்துவர் உஷா ஸ்ரீராம், கன்னிகோவில் ராஜா, செல்வராஜ், அருணாச்சலம், குர் ஆர்யேஹ் எமி, பொன்னி, பிரியா பாபு, சந்திரன், செந்தமிழ் செல்வி, நைரா, ரூபா செல்வநாயகி, உள்ளிட்டோருக்கு மனிதநேய விருதுகள்   வழங்கப்பட்டன.




விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து பேசிய அப்சரா ரெட்டி, " தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான விருதுகள் பிரபலமான முகங்கள் மற்றும் கவர்ச்சியான வேலைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்  மக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயல்படும் சமூகங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை உருவாக்க  முயற்சியில் உண்மையான கடின  உழைப்பை வழங்குகின்றவர்களுக்கு இந்த விருதுகள்  வழங்கப்படுகின்றன.


அதிக பிரபலம் இல்லாத  தன்னார்வலர்களின் துணிச்சலான பணியை  அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது போன்ற விருதுகள் வழங்குவதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண