கரூர்  மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 95  பயனாளிகளுக்கு ரூ.15,68,730 மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.


 


   

                                                                                                                                                                                                                            மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 95  பயனாளிகளுக்கு ரூ. 15,68,730  மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக்கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 477 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 67 மனுக்கள் பெறப்பட்டது.


 




 


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 


அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 21 நபருக்கு  ரூ.262500 இலட்சம் மதிப்பிலான திறன்பேசியும், 4 நபர்களுக்கு தலா ரூ.27360 மதிப்பிலான தையல் இயந்திரத்தினையும், 2 நபர்களுக்கு ரூ.2,10,000 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வீல் சேரும், 2 நபர்களுக்கு ரூ.15,800 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், 1 நபருக்கு ரூ.2780 மதிப்பீட்டில் காதலிக்கருவியும், 1 நபருக்கு ரூ.540 மதிப்பீட்டில் ஊன்றுகோலும், 5 நபர்களுக்கு ரூ.4,17500 லட்சம் மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டரும்,  முன்னோடி வங்கியின் சார்பாக 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.25 இலட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவியும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பீட்டில் ரூ.1,20000 மதிப்பிலான தையல் இயந்திரத்தினையும், சமுக நலத்துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு தலா ரூ.5350 மதிப்பீட்டில் ரூ.187250 மதிப்பிலான தையல் இயந்திரத்தினையும் என மொத்தம்  95 பயனாளிகளுக்கு ரூ. 15,68,730 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.


 




 


இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சந்தியா, மாவட்ட சமுகநலத்துறை அலுவலர் ஷீலாசுந்தரி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.