தமிழ்நாட்டில் வருகிற 17ம் தேதி(திங்கட்கிழமை) அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 18-ஆம் தேதி தைப்பூசம் என்பதால் 17-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 29-ஆம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. திட்டமிட்டபடி இன்று முதல் வருகின்ற ஜனவரி 13 ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பிற ஊர்களில் இருந்து 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம்,கோயம்பேடு ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  மாதவரத்தில் இருந்து பொன்னேரி,கும்முடிப்பூண்டி,ஊத்துகோட்டை,ஆந்திரா செல்வோர் பயணம் செய்யலாம் என்றும், கே.கே.நகரில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி,கடலூர்,சிதம்பரம் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம்,தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமல, புதுச்சேரி,கடலூர் போன்ற ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



தொடர்ந்து, தென் மாவட்டங்களான மதுரை,திண்டுக்கல்,இராமநாதபுரம்,தூத்துக்குடி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். 

 

பூந்தமல்லி பேருந்து நிலையம் :


திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு வழியாக செல்ல இருக்கிறது.


புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு :


ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர். திருப்பூர் ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர். எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு பயணம் செய்யலாம்.




முன்பதிவு வசதி :


முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.TA.stc.in, Dxgte official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண