மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 26  பயனாளிகளுக்கு. ரூ. 9,80, 900  மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

Continues below advertisement


 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மொத்தம்  26 பயனாளிகளுக்கு ரூ.9,80,900  மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 527 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 51 மனுக்கள் பெறப்பட்டது.


 






மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார். 


அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 4 நபருக்கு  ரூ.422,000 முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்க்களுக்கான பிரதியோகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் , 3  நபர்களுக்கு ரூ.8,340 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், 3 நபர்களுக்கு பஸ் பாஸ், 1  நபருக்கு ரூ.560 மதிப்பீட்டில் ஊன்றுக்கோலும், கூட்டுறவுத்துறை சார்பில் 12 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு  ரூ.5,50,000 மதிப்பீட்டில் வெள்ளாடு வளர்ப்பு, பெட்டிக்கடை, செம்மறி ஆடு வளர்ப்பு ஆகியவற்றிற்கான கடனுதவிகளும்,  கரூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடையில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர்கள் குளித்தலை வட்டம் திரு..சு.முரளி அவர்களுக்கு முதல் பரிசு ரூ.4000 க்கான காசோலை மற்றும் சான்றிதழும், அரவக்குறிச்சி வட்டம் திருமதி.நந்தினி அவர்களுக்கு  இரண்டாம் பரிசு ரூ.3000 க்கான காசோலை மற்றும் சான்றிதழும், சிறப்பாக பணியாற்றி எடையாளருக்கான முதல் பரிசு ரூ.3000 க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும் என மொத்தம்  26 பயனாளிகளுக்கு ரூ.9,80,900 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர்  வழங்கினார்கள்


 




 


இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்) கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.