தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.



ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, அபிஷேக பொடி, அரிசி மாவு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவருக்கு அனுமதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து தங்க கவச அலங்காரத்தில் காட்சியளிக்க செய்தனர்.


 


 




அதைத் தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா மகாதீபாராதனை நடைபெற்றது. தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


 


 


 




கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காலபைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், கரும்புச்சாறு, அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 


 




 


அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வடை மாலை சாற்றிய பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.