திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


தி.மு.க சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான டாக்டர் மஸ்தான். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார்.


சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்த்த பொழுது சிகிச்சை பலனின்றி,  உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


முன்னாள் திமுக எம்பி மஸ்தான் மரண வழக்கில் திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளது. மஸ்தானின் தம்பியின் மருமகன் இம்ரான் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான் தீட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமானது. மஸ்தானை கொலை செய்ய, இம்ரான் ரூ.15 லட்சம் பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.