கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவின் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு  மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை வகித்தார்கள். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தலைவர் வைரவன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.




தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை ) நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி (19.08.2022) அன்று  திறந்து வைத்து பார்வையிட்டார்கள். 





அதன் தொடர்ச்சியாக இன்று சிந்தனை அரங்கத்தில் செந்தில் கணேஷ் , ராஜலட்சுமி குழுவினரின் மண்மனம் – மக்களிசை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக புத்தக அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகள், தொல்லியல் அருங்காட்சியகம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவரங்கினை அதிக அளவிலான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டார்கள். மேலும், நாள்தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பரணி பார்க் மெட்ரிக் மற்றும் பரணி வித்தியாலயா, அட்ரின் லாயல் செகன்டரி பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.





முன்னதாக கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா வரவேற்றும், நிறைவாக வாசகர் வட்ட துணைத்தலைவர், மாவட்ட மைய நூலகம் விமலாதித்தன் நன்றி தெரிவித்தும் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டயுதபாணி, மாமன்ற உறுப்பினர் வசுமதி, மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர் தீபம் சங்கர், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண