AIADMK Candidate: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் இவர்தானா? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு 

Erode East By Election AIADMK Candidate: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில்  இருந்த காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

திமுக கூட்டணி:

இந்நிலையில், ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ( ஜனவரி.22 ), மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணி

இந்நிலையில் அதிமுக கூட்டணி சார்பாக, எந்த கட்சி போட்டியிடும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதிமுக கட்சியானது ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இருவரும் தனி தனியாக போட்டியிட்டால், பிரச்னை மேலும் வலுக்கும் என்றும், அதன் காரணமாக கூட்டணி கட்சிகளை களமிறக்க வாய்ப்புள்ளதாகவும், முக்கியமாக பாஜக போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. 

ஆலோசனை:

இந்நிலையில் இன்று ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக, மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில்,எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என்ன முடிவு எடுக்கவுள்ளதை என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Continues below advertisement