Chidambaram Accident: சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


5 பேர் உயிரிழப்பு:


சிதம்பரம் அருகே பு,. முட்லூர் ஆனையாங்குப்பம் விழுப்புரம் - நாகை, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில்  காரும், லாரும் நேருக்கு மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்கும். அதன்படி, உயிரிழந்தவர்கள் யாசர் அராபத் (40), முகமது அனவர் (56), ஹாஜிதா பேகம் (62), சாராபாத் நிஷா (30) மற்றும் அப்னான் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு, வீடு திரும்பும்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.






போலீசார் விசாரணை:


கார் சென்னையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தில் அந்த காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேதச பரிசோதனைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர். ஓட்டுனர்களின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது மது போதையில் வாகனம் ஓட்டினார்களா? என்ற நோக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.