இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:



”இன்று( ஜனவரி 29) மற்றும் நாளை ( ஜனவரி 30) தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை, தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   ஏனைய பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.


03.02.2024 மற்றும் 04.02.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 


உறைபனி எச்சரிக்கை:


29.01.2024 மற்றும் 30.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


29.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


30.01.2024: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க 


CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்: உற்சாக வரவேற்பு: ஜோகோவிச்சுடனும் ஒரு க்ளிக்!


Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது - பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி


Arvind Kathare: எந்த மதமாக இருந்தாலும் சரி; குழந்தைகளை வழிபாட்டு தலங்களுக்கு அனுப்புங்க! கோரிக்கை வைத்த பிரபல சீரியல் நடிகர்!