நம்பிக்கை இல்லாமல் கடவுளின் பவரை உணர முடியாது என சீரியல் நடிகர் அரவிந்த் கதரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


பெரிய திரையில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த அரவிந்த கதரே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மருமகள், தெய்வ மகள், யாரடி நீ மோகினி என பல சீரியல்களிலும் நடித்துள்ள அவர், நேர்காணல் ஒன்றில் தன்னுடைய கடவுள் நம்பிக்கை பற்றி வெளிப்படையாக பல விஷயங்களை தெரிவித்துள்ளார். 


அதாவது, “இப்ப இருக்குற காலக்கட்டத்தில் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை என்பது இல்லை. ஆனால் நான் எப்பவும் நினைப்பது ஒன்று தான். நமக்கு மேல ஒரு சக்தி உள்ளது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி. ஒரு சூப்பர் பவர் நம்மை காத்துக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் அதை உணர முடியாது. நமக்குள்ளே, நம்முடைய மனசாட்சி தான் கடவுள் என எங்க அம்மா சொல்லியிருக்கிறார். 


சின்ன வயதில் இருந்தே நான் பயந்த சுபாவம் கொண்டவன். இருட்டில் செல்லவே பயப்படுவேன். அப்போது அனுமான் கீர்த்தனை படிக்க சொன்னார்கள். அதை படித்ததும் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது. பிறகு எனக்குள் இருந்த பயம் போய்விட்டது. படித்தால் பயம் வராது என்ற ஒரு நம்பிக்கை தான் நான் சொன்ன அந்த சூப்பர் பவருடன் தொடர்புடையது. அப்படித்தான் எனக்குள் பக்தி, கடவுள் மீதான பயம் என்பது இருந்தது. 


என்னுடைய நண்பர் தான் சாய் பாபா தரிசனம் செய்வதை கல்லூரி படிக்கும்போது அறிமுகம் செய்தார். இப்ப இருக்கிற பெற்றோர்களுக்கு நேரம் என்பது இல்லை. அவர்கள் குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். இது சரியானது இல்லை. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி குழந்தைகளை வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை பழக்க வேண்டும். என்னுடைய குழந்தைகள் நான் இல்லையென்றாலும் விசேஷ நாட்களில் கோயிலுக்கு சென்று விடுவார்கள்.


இப்ப இருக்கிற தலைமுறையினர் மாதா, பிதாவை தான் மதிக்கவில்லை. குரு, தெய்வத்தையாவது மதிக்க வேண்டும். நான் நிறைய சர்ச் போயிருக்கேன். அந்த இடமே அமைதியாக இருக்கும். கடவுளுக்கும் நமக்குமான தொடர்பு என்பது இருக்கும். அதேபோல் தர்காவில் இருக்கும் பவர் தனித்துவமானது. அதை எல்லாம் உணரும்போது தான் அந்த பவர் என்ன என்பது தெரியும். வருடத்துக்கு 2 முறையாவது வழிபாட்டு தலங்களுக்கு செல்லுங்கள். மனதுக்கு நிறைவாக உணர்வீர்கள்” என தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க:  Actress Rohini: ”சும்மா வந்துட்டு போனா மட்டும் பத்தாது” - பிரதமர் மோடியை சீண்டிய நடிகை ரோகிணி