மாநில உரிமை மீட்புக்கான இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தொடர்பான இருசக்கர பேரணி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி வந்தடைந்தது. திமுகவினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.


 




திமுக இளைஞரணி செயலாளர், தமிழக  மேம்பாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சார பேரணியை கடந்த 15-ஆம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார்.  இதனை தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு செல்லும் விதமாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் வாகனப் பேரணி சென்று வருகின்றனர்.


 




அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஷா நகர் கார்னர் பகுதியில் இருசக்கர வாகன பிரச்சார பேரணி வந்தடைந்தது. நூற்றுக்கணக்கான திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த இருசக்கர வாகன பேரணியானது அரவக்குறிச்சி, க.பரமத்தி வழியாக  வேலாயுதம்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது.


 




மாநில உரிமை மீட்புக்கான இந்த இருசக்கர வாகன பிரச்சார பேரணியின் போது, பொதுமக்களிடம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்துக்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி முன்னதாக மாற்றுக் கட்சியினர் 15 நபர்கள் திமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தொடங்கிய பிரச்சார பேரணியானது,  கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ளது.