இடைநீக்கம் செய்த விசிக - அறிக்கை விட்ட ஆதவ் அர்ஜுனா! திமுக உடனடி ரியாக்‌ஷன்! 

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

Continues below advertisement

ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திமுக எந்த அழுத்தமும் தரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது விசிகவின் முடிவு. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திமுக எந்த அழுத்தமும் தரவில்லை. அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அழுத்தம் தரவேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. மன்னராட்சி மனநிலை தமிழகத்தில் இல்லை. மக்களை சந்தித்துதான் பதவிக்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார். 

முன்னதாக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். ஆனால் விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். 

அப்போது அரசியல் பேச வேண்டாம் என அறிவுறுத்தியும் ஆதவ் அர்ஜுனா அரசியல் பேசியதாக விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது  தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. 
2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. 
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி 
மற்றும்  தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும்  பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சித் தலைமையில் நடவடிக்கையினை காலத்தில் கரங்களில் ஒப்படைக்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாக பயணிக்கிறேன். தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola