தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த பூங்கொடி - நாகராஜ் என்பவரின் மகள் மகேஸ்வரி (25) என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் அரசகுமார் என்பவருக்கும்  கடந்த பிப்ரவரி மாதம் 11. ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும் கணவரும் வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர் வேலை விஷயமாக சென்னை சென்றுள்ளார். தொடர்ந்து  இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மகேஸ்வரி தூங்கிய அறையின் கதவை தட்டி கூப்பிட்டுள்ளார். அப்பொழுது நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்காததால், அச்சமடைந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

 

அப்போது மகேஸ்வரி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த தகவலறிந்த பாலக்கோடு காவல் துறையினர் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமான ஒன்றரை மாதத்தில், புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தருமபுரி கோட்டாசியர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரனை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060). 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண