கடலுார்: கடலுார் மாநகரில் இரண்டாம் கட்ட பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 34 வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு இணைப்பு வழங்க முடியும்.
65 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத்திட்டம்
கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுநீருடன் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.
மேலும் கொசுத்தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நகராட்சியாக இருக்கும் போதே பாதாள திட்டத்தை நிறைவேற்ற முன் வந்தது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண 65 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தை 2 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 33 வார்டுகளில் முழுமையாகவும், 3 வார்டுகளில் பகுதியாகவும் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தேவனாம்பட்டிணத்தில் செயல்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் 200 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போல் அல்லாமல் அதிகளவு இயந்திரங்களை பயன்படுத்தி குழி தோண்டி உடனடியாக பைப்புகள், புதைக்கப்படுகின்றன.
புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 34 வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு இணைப்பு வழங்க முடியும். நாளொன்றுக்கு ஒரு கோடியே 20 லட்சம் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும். கடலுார் மாநகரில் வைப்புத் தொகை செலுத்தி பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை 3 ஆயிரத்திற்கும் குறைவான இணைப்புகள் மட்டுமே பெற்றுள்ளனர்.
இதனால் அனைவருக்கும் தவணை முறையில் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை இணைப்புகளை பெறுவதற்கு கட்டடத்தின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் உரிமையாளரின் ஒப்புதலுடன் கமிஷனருக்கு விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்ப படிவம் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் விற்பனைப் பத்திர நகல், சொத்து வரி செலுத்திய ரசீது நகல் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து மாநகர பொறியாளர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி விண்ணப்பத்தை பரிசீலித்து இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
பாதாள சாக்கடை திட்டம்
விரைவான நகரமயமாக்கலின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, தேவையான அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், நிலத்தடி கழிவுநீர் திட்டத்தின் கீழ், படிப்படியாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது
17 யுஎல்பிக்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தல் சென்னை பெருநகர நீர் வழங்கல் கழிவுநீர் வாரியம் (சிஎம்டபிள்யூஎஸ்எஸ்பி), தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (டிஏடிஏடி) மற்றும் மூலம் செயல்படுத்த உள்ளது, உள்ளாட்சிகளில் உள்ள 58 நகரங்களில் (NRCP), TNUDP III, JnNURM, UIDSSMT, Kfw, IUDM, TNSUDP, AMRUT, ADB மற்றும் ஸ்மார்ட் சிட்டிபோன்ற நிதி நிருவங்களின் உதவியுடன் செயல் படுத்தப்படும்.
இத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர மேம்பாட்டுத் திட்டம்-3 இன் கீழ் 22 நகரங்களில் செயல்படுத்த மொத்தம் ரூ.1035.51 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், உதகமண்டலம், சின்னமனூர், நாமக்கல், தர்மபுரி, பெரம்பலூர், திண்டுக்கல் (பகுதி), திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருவாரூர், கடலூர், தேனி-அல்லிநகரம், வேலூர், நாகப்பட்டினம் (பகுதி), புதுக்கோட்டை, திருவள்ளூர் கிருஷ்ணூர் மற்றும் பல்லவபுரம் நகராட்சிகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.