நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் இரண்டாவது அலையின் பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 10,986 பேர் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவற்றில் சென்னையில் மட்டும் 3711 பேர் தொற்று பாதிப்பு உள்ளாகியுள்ளனர். 


இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் மருந்துகள், ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்னென்ன? இதுதொடர்பாக 'The Newsminute' தளம் ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் இருக்கும் நபர்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி கொரோனா பரிசோதனையை வீட்டிற்கு வந்து மேற்கொள்ளும் தனியார் பரிசோதனை மையங்கள்:


மெடாள் ஹெல்த்கேர்: 7550177777


நியூபெர்க் டயாக்னாஸ்டிக்ஸ்: 97003 69700


ஆர்த்தி ஸ்கேன்ஸ்: 75500 75500


ஒய் ஆர் ஜி கேர்: கோஷல் 91 9940034333


பயோலைன் பரிசோதனை மையம், கோவை: 04224200099


விவேக் பரிசோதனை மையம், கன்னியாகுமரி: 04652230108


இந்த எண்களை தொடர்புகொண்டால் வீட்டிற்கு வந்து கொரோனா பரிசோதனைக்கு மாதிரியை எடுத்து செல்வார்கள். அடுத்த 24 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகள் வரும். இந்தப் பரிசோதனைக்கு கட்டணமாக 1,700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 




மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கை வசதி விவரங்களுக்கு: 


ரெம்டெசிவிர்: மிஸ்டர் மேட் மருந்தகம், 8939169999


தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளின் படுக்கை வசதி குறித்து தெரிந்துகொள்ள : படுக்கை வசதி 


ஆக்சிஜன் சிலிண்டர்கள் தொடர்பான விவரங்களை பெற: அலீம் ரஹ்மான்


ஆம்புலன்ஸ் வசதி: 


ஸ்டார் பிளஸ் கட்டண ஆம்புலன்ஸ் வசதி, 1800 121911911


ஆம்புலன்ஸ் ஆன் கால்:  https://www.ambulanceoncall.com/ அல்லது  +91 98846 39400.


தமிழ்நாடு அரசின் உதவி எண்கள்: 


24 மணி நேர உதவி மையம்: 044-29510400, 044-29510500


மருத்துவ ஆலோசனைக்கு: 044-46122300,  044-25384520 மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்களை மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப தொடர்பு கொள்ளலாம். இவை தவிர மத்திய அரசு அறிவித்துள்ள 1075 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்கள் மற்றும் உதவியை பெறலாம்.