தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் நேற்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 681 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 071 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர். நேற்று மாநிலம் முழுவதம் 48 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 53 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.


இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 11 ஆயிரத்து 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 750 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 7,931 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


       


இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 059-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 6 லட்சத்து 18 ஆயிரத்து 809 ஆகும். பெண்கள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 214 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 36 நபர்கள் ஆவர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 6 ஆயிரத்து 973 நபர்களும், பெண்கள் 4 ஆயிரத்து 708 நபர்களும் ஆகும்.




கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 7 ஆயிரத்து 71 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 27 ஆயிரத்து 440 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்கள். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இருப்பவர்கள் 7 ஆயிரத்து 275 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை 79 ஆயிரத்து 804 ஆகும்.