கரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறையில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடாமல் அரசு அலுவலர்கள் துணையோடு Sankaranand Infra , Contractor Karur , ஒப்பந்ததாரருக்கு சாலை பணிகள் முடிந்ததாக ஆவணங்களை அதிகாரிகள் துணையோடு தயார் செய்து கொண்டு, பணம் வழங்கி ஊழல் நடைபெற்றது தொடர்பாக, ஆதாரங்களுடன் கூடிய புகார் மனுவை கடந்த 05.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். 


 



 


அதன் பிறகு அந்த ஒப்பந்த நிறுவனம் 06.04.2022 அன்று கரூர் புகளூர் பைபாஸ் சாலை முதல் புகளூர் அரசு மேல்நிலை பள்ளி வழியாக , புகளூர் சர்க்கரை ஆலை வரை அவசர அவசரமாக நடைபெற்ற ஊழல் சம்பவத்தை மறைக்கும் விதமாக புதியதாக சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அது குறித்த தகவல் தெரிந்தவுடன் உள்ளூர் பொதுமக்களுடன், அவசர நிலையில் மேற்கொள்ளபட்ட சாலை பணிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டு, 06.04.2022 அன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அவர்களிடம், கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருவிக மூலம் ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கப்பட்டது.


 




ஆனால் மீண்டும் 07.04.2022 அன்று காலை மேற்சொன்ன கரூர் புகளூர் பைபாஸ் - புகளூர் சர்க்கரை ஆலை மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னியூர் புதூர் சாலைகளில் மீண்டும் அந்த தனியார் நிறுவனம் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உதவியுடன் புதியதாக சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.உடனடியாக இது குறித்த ஆதாரங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் 07.04.2022 அன்று மாலை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஊழல் தடயங்களை மறைப்பதை தடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது . 


08.04.2022 அன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் , தலைமை செயலாளர் அவர்களிடம் மேற்கண்ட ஊழல் குறித்து ஆதாரங்களுடன் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது . நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கப்பட்டது.அதன் பிறகு உடனடியாக 08.04.2022 அன்று இரவில் அவரசர கதியில் கரூர் - ஈசநத்தம் - கூம்பூர் - வீரியம்பட்டி சாலை பணிகளை அவசர கதியில் Sankaranand infra , Contractor Karur , ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ளார். இது குறித்த தகவல் தெரிய வந்தவுடன் , உள்ளூர் பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு Video பதிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எங்கள் கட்சி நிர்வாகிகளை மிரட்டி, இது போன்ற ஊழல் குற்றச் சாட்டுகளை வெளிப்படுத்தக் கூடாது என்று மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், பொய்யான புகார் ஒன்றினை, மேற்சொன்ன M.C. சங்கர் ஆனந்தின் கையாட்கள் மூலம் கொடுக்க செய்தும், அவர்களே ஒரு லாரியை தீ வைத்து பகுதியாக எரிந்து கொண்டும், அவர்களே தங்களுக்கு காயங்கள் ஏற்படுத்திக் கொண்டும், ( Self Inflicted Injury ) அக்காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற சேர்ந்துள்ளார்கள் .


 




 


எனவே , ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ( அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் காண்டிராக்டர் நிறுவனம், எதிர் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் ) மீது நடவடிக்கை எடுத்தும் , ஆதாரங்களை அழிக்க முன்பட்டவர்கள் மீது நடவடிகக்கை எடுத்தும் , இனி மேற் கொண்டு புதியதாக எல்லவிதமான சாலை பணிகளையும், பிரச்சனைக்குரிய நான்கு சாலைகள் ) மேற்கொள்ள வேண்டாம் என மேற்சொன்ன காண்டிராக்ட் நிறுவனத்திற்கு, உத்திரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.