’நீங்கள் தான் கடவுள்கள்’ - செவிலியர்கள் கால்களில் விழுந்து கோவை இஎஸ்ஐ முதல்வர் ரவீந்திரன் உருக்கம்

நைட்டிங்கேல் உருவ படத்திற்கு முன்பாக கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்கள் என கூறி கண்ணீர் மல்க உருக்கத்துடன் தெரிவித்தார்.

Continues below advertisement

நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர்களான செவிலியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement


இந்நிலையில் கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையான இஎஸ்ஐ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு  அம்மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன், மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன் நைட்டிங்கேல் உருவ படத்திற்கு முன்பாக கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்கள் என கூறி கண்ணீர் மல்க உருக்கத்துடன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்ட போது, “நான் கடந்த முறை கொரொனா பாதிப்பால் இம்மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். அப்போது என்னை இங்கு பணியாற்றும் செவிலியர்கள் நல்ல முறையில் பார்த்துக் கொண்டார்கள். அவர்களது சேவை என்னவென்று எனக்கு தெரியும். வேறு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நைட்டிங்கேல் உருவ படத்திற்கு முன்பாக விழுந்து வணங்கினேன். இது அனைத்து செவிலியர்களுக்கும் செய்யப்பட்ட மரியாதை. ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் முதலில் போற்றப்பட கூடியவர்கள் செவிலியர்கள். அப்புறம் தான் மருத்துவர்கள்” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola