கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தொகுத்த 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டுநான் தொகுத்த'கலைஞர் 100 கவிதைகள் 100'என்ற நூலைமாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தமது முகாம் அலுவலகத்தில்வெளியிட்டார்
திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி முதல்நூல்பெற்றுக்கொண்டார்
அமைச்சர்கள்துரைமுருகன், பொன்முடிகே.என்.நேரு, எ.வ.வேலுமற்றும் வீ.அன்புராஜ்உடனிருந்தனர்
கல்லாலும் சொல்லாலும்எழுப்பப்படுவன மட்டுமேநினைவுச் சின்னங்களாய்நிலைபெறுகின்றன
இந்த 100 கவிதைகளும்கலைஞருக்குக் கவிஞர்கள்சொல்லால் எழுப்பியநினைவுச் சின்னம்
இந்திய அரசியல் பெருவெளியில் ஓர் இனக்குழுத் தலைவனுக்கோஇந்திய தேசியத் தலைவனுக்கோ தான் வாழ்ந்த காலத்தின்100 கவிஞர்களால் பாடப்பட்ட பெருமைகலைஞருக்கன்றிவேறெவருக்குமில்லை
அப்படிவகுத்த பெருமை கலைஞருக்கு;தொகுத்த பெருமை எமக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெற்று விட்டதால் இப்போது கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக மீதும் கலைஞர் கருணாநிதி மீது மிகவும் பற்று கொண்ட கவிஞர் வைரமுத்து 100 கவிஞர்கள் கலைஞருக்காக பாடிய பாடலை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலை கருணாநிதியின் மகனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி பெற்றுக்கொண்டார்.