சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய பாதை ’அன்பு பாதை' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு ஏதுவாக சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். அதன்படி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருபத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிசிக்சை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய நவீன உதவி உபகரணங்களுக்கான கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். குறிப்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். 


மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை


மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மெரினா கடற்கரையில் அவர்களுக்கு என சிறப்பு பாதை அமைத்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.1.14 கோடி செலவில் பாபூல், சிவப்பு மராந்தி மற்றும் பிரேசிலிய மரங்களால் ஆன, சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான புதிய பாதை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் இருந்து  கடற்கரை வரையில் 263 மீ நீளம் மற்றும் 3மீ அகலத்துடன் இந்த பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகினை ரசிப்பதற்காக சிறப்பு சக்கர நாற்காலி வண்டி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நவம்பர் 27-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.


மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி:


சென்னை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள, புதிய பிரத்யேக பாதை மாற்றுத்திறனாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இனி மற்றவர்களை போல தாங்களும் கடலுக்கு அருகில் சென்று அதன் பேரழகை ரசிக்க முடியும் எனவும், கடல் அலைகள் தங்களை தீண்டும் அந்த ஆனந்த அனுபவத்தை உணர முடியும் எனவும், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.


"அன்பு பாதை”


இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது, ”  மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும், தனி கவனம் செலுத்த வேண்டும். சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய பாதை ’அன்பு பாதை' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இந்த அன்பு பாதையால் கிடைக்கும் நன்மை மகிழ்வும் எத்தனை கோடி கிடைத்தாலும் கிடைக்காது என்று பேசினார். அவர்கள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன்” என்று கூறினார்.




மேலும் படிக்க


CM Stalin : மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு


’வீட்டிலிருந்து பணிபுரிய மடிக்கணினி...” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு