✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • CM Stalin: சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது - முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது - முதலமைச்சர் ஸ்டாலின்

Advertisement
செல்வகுமார் Updated at: 11 Jun 2024 08:13 PM (IST)

Chief Minister Stalin: தமிழ்நாடு சிறக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை

NEXT PREV












உங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து இன்னும் பல புதிய திட்டங்களைக் கொண்டு வரவுள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement


நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதும் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது.


உங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து இன்னும் பல புதிய திட்டங்களைக் கொண்டுவரவுள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


நமது எண்ணங்களோடு, மாவட்ட ஆட்சியர்களின் உள்ளீடுகளையும் பெற்றுக் கொண்டோம். தமிழ்நாடு சிறக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



 


மக்களவைத் தேர்தல்: 


மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனால் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக எந்தவொரு புதுவித அறிவிப்பும் வெளியிடக் கூடாது என நிலை ஏற்பட்டது. 


இந்நிலையில், தற்போது தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் விலக்கி கொள்ளப்பட்டன. 


இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பாகவும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் குறித்தும், வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.



 


மேலும் மழைக்கால முன்னெச்சரிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், அந்த பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 













Published at: 11 Jun 2024 07:45 PM (IST)
Tags: tamilnadu breaking news CM STALIN Abp nadu
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.