சக மாணவர்களால் நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். காயமடைந்த மாணவர் சின்னதுரையின் தாயார் அம்பிகாபதியிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சையில் உள்ள மாணவனை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு நலம் விசாரித்தனர்.