சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.  


சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மீனம்பாக்கம், சாந்தோம், மெரினா உள்ளிட்ட பல்வேறு மாலை 6 மணியில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. போரூர், பழவந்தாங்கல், வளசரவாக்கத்திலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 


மீனம்பாக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கிண்டி, மயிலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வயப்பு என வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.