தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமணடல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று காலை கடும் வெயில் இருந்த நிலையில், மதியத்திற்கு பின்பு, கருமேகங்கள் சென்னை மாவட்டத்தை சூழ்ந்தன.


இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திடீரென்று மழை பெய்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல்வேறு சாலைகள் மழை நீர் தேங்க தொடங்கியுள்ளது. இது அவர்களுக்கு இந்த மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம்,பெரம்பலூர், ராமநாதபுரம்,கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


 






முன்னதாக  சென்னை மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. 


மாவட்டங்களில் கன மழை:


தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமணடல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


 






நீலகரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் ஆகிய  மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.