புத்தகப் பிரியரா நீங்கள்? வீடுகளில் வைத்திருக்கிறீர்களா? இதோ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

Home library : சென்னை மாவட்டத்தில்‌ வீடுகளில்‌ நூலகம்‌ வைத்திருப்போர், இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்‌ என்று மாவட்ட நூலக அலுவலர்‌ அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

சென்னை மாவட்டத்தில்‌ வீடுகளில்‌ நூலகம்‌ வைத்திருப்போர், இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்‌ என்று மாவட்ட நூலக அலுவலர்‌ அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலகம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழக அரசு, வீடுதோறும்‌ நூலகங்கள்‌ அமைக்க வேண்டும்‌ என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம்‌ தோறும்‌ புத்தகத்‌ திருவிழாக்களை நடத்தி வருகிறது.

சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில்‌ கேடயம்

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ வீடு தோறும்‌ நூலகங்கள்‌ அமைத்து பயன்படுத்தி வரும்‌ தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு விருது வழங்கப்படும்‌ என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை அடுத்து‌, சென்னை மாவட்டத்தில்‌ வீடுதோறும்‌ நூலகங்கள்‌ அமைத்துச்‌ சிறப்பாகப்‌ பயன்படுத்தி வரும்‌ தனி நபருக்கு மாவட்டங்களில்‌ நடத்தப்படும்‌ புத்தக கண்காட்சியில்‌ சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில்‌ கேடயம் மற்றும்‌ சான்றிதழ்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைவரால்‌ வழங்கப்படவுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌, தங்களது வீட்டில்‌ உள்ள நூலகத்தில்‌ எத்தனை நூல்கள்‌ உள்ளன, எந்த வகையான நூல்கள்‌ மற்றும்‌ அரிய நூல்கள்‌ விவரம்‌ என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அத்துடன், பெயர்‌, முகவரி, செல்போன்‌ எண்‌ ஆகியவற்றைக்‌ குறிப்பிட்டு dlochennai1@gmail.com என்ற இ-மெயில்‌ முகவரிக்கும்‌, கீழ்க்காணும்‌ மாவட்ட நூலக அலுவலக முகவரிக்கும்‌ விண்ணப்பக்கலாம்‌ என மாவட்ட நூலக அலுவலரால்‌ தெரிவிக்கப்படுகிறது''.

இவ்வாறு சென்னை அண்ணா சாலை மாவட்ட நூலக ஆணைக் குழு அலுவலக மாவட்ட நூலக அலுவலர்‌ தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: 044- 28524791

Continues below advertisement
Sponsored Links by Taboola