தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பத்தூர், தேனி மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


கிரிஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


”தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,


11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.



12.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 



கேசிஎஸ் மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) தலா 8, மீ.மாத்தூர் (கடலூர்) 7, காட்டுமயிலூர் (கடலூர்) 6, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), அடையாறு (சென்னை), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), பூந்தமல்லி (திருவள்ளூர்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), நம்பியூர் (ஈரோடு), நத்தம் (திண்டுக்கல்) தலா 5, வேப்பூர் (கடலூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), நாமக்கல், ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), உதகமண்டலம் (நீலகிரி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), மலையூர் (புதுக்கோட்டை), புதுக்கோட்டை, பண்ருட்டி ((கடலூர்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), வடகுத்து (கடலூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), சென்னை விமான நிலையம்  தலா 4, கோத்தகிரி (நீலகிரி), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), எம்ஜிஆர் நகர் (சென்னை), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), சிவகங்கை, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), விருதுநகர் AWS (விருதுநகர்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பென்னாகரம் (தருமபுரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), விருதுநகர், கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை),  லக்கூர் (கடலூர்), நாகப்பட்டினம், ஆம்பூர் (திருப்பத்தூர்), திருமயம் (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), திருப்பத்தூர், பொன்னனியார் அணை (திருச்சி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), மேற்கு தாம்பரம் SIT (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் ISRO  (சென்னை), NIOT  பள்ளிக்கரணை (சென்னை) தலா 3.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


11.08.2023 மற்றும் 12.08.2023: தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


13.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.