தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீதுகாவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டது, தொடர்பாக பாஜக பிரச்சார பிரிவு மாவட்டச் செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, ராமகிருஷ்ணன், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பெற்றுக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



காலதாமதமானால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்


பாஜக துணைத் தலைவர் சசிகலா புஸ்பா வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காலதாமதம் படுத்தினால் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் தாக்குதல் சம்பவத்தில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் மீது பாஜகவினர் கொடுத்த புகார் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக பாஜக மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இந்நிலையில் இன்று காலைக்குள் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாவிட்டால் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாடம் செய்ய உள்ளதாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவித்து இருந்தார்.


இந்நிலையில் சிப்காட் காவல்நிலையத்தில் அளித்து இருந்த புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


முன்னதாக, தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சிறுபான்மை அணியினர் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி மற்றும் மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசுகையில், “தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கீதாஜீவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தேவையில்லாமல் பேசி வருகின்றார். அண்ணாமலை படித்து மெரிட்டில் பாஸ் செய்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர். அவர் தவறு செய்த குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜராக்குவது தான் வழக்கம். உங்களை போல  குற்றவாளியாக நீதிமன்றத்தில் நின்றது கிடையாது. எனவே எங்கள் தலைவர் அண்ணாமலையை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது. எங்கள் தலைவர் ஒன்றும் உங்கள் தலைவர் போல் கிடையாது அதனை மனதில் வைத்து பேசுங்கள்.


உங்கள் வேலைகளை பார்க்காமல் உங்கள் தவறுகளை சுட்டி காட்டும் எங்கள் தலைவர் அண்ணாமலையை தேவையில்லாமல் பேசினால். வெளியில் வர கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது” என்று திமுக அமைச்சர் கீதாஜீவனுக்கு சசிகலா புஷ்பா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.