Just In

ஜப்பானை ஓவர்டேக் செய்யும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்.. வருகிறது ஷாப்பிங் மால்.. இத்தனை வசதிகளா

புதுச்சேரியில் நாளை மின் நிறுத்தம்! வில்லியனூர் பகுதியில் பராமரிப்பு பணி; உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!

கடலூர் அருகே வெள்ள நீரை விரைந்து வெளியேற்றும் திட்டம்: 15,600 ஏக்கர் நிலங்கள் பாதுகாப்பாகும்

Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி

பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்
முதற்கட்டமாக 109 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரித்த நிலையில் ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக கடற்கரையில் விடப்பட்டன.
Continues below advertisement

கடலில் விடப்படும் ஆமை குஞ்சுகள்
கடல் வளத்தை பாதுகாக்கவும், கடலைத் தூய்மைப்படுத்தவும், மீன் வளத்தை பெருக்கவும் கடல் ஆமைகள் பெரும்பங்கு வகிக்கிறது. ஆமை இனங்கள் அழிவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து அதனை பத்திரப்படுத்தி குஞ்சு பொரித்த பின்பு அதனை கடலில் விட்டு வருகின்றனர்.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கடல் ஆமை இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் முட்டைகள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளால் சேதம் அடையாமல் இருக்கும் வகையில் கடலூர் வனத்துறை சார்பில் கடலூர் கடலோர பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாப்பதற்காக பொரிப்பகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் ஆமை மூட்டைகள் குஞ்சுகள் பொறிக்கப்பட்டு கடலில் விடும் பணி வனத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக சேகரித்து வைக்கப்பட்ட 109 ஆமை முட்டைகள் குஞ்சு பொரித்த நிலையில் கடலூர் மாவட்ட வனத்துறை சார்பாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 109 ஆமை குஞ்சுகள் கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி, தலைமையிலான குழுவினர் மற்றும் ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாப்பாக வைத்து வனத்துறைக்கு உதவிய விலங்கு ஆர்வலர் செல்லா ஆகியோர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.