புதுச்சேரி: அரிக்கமேடுவை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி வேகமாக நடக்க வாய்ப்பில்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரிக்கமேடுவை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி வேகமாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் புதுச்சேரி நிர்வாகம் அது மாதிரியுள்ளது, இதை சிரமப்பட்டு செய்கிறோம். கடந்த 2003ல் தொடங்கினோம் தற்போது 2025 ஆகிவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பாருங்கள் என முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
அரிக்கமேடு ஒரு பிந்தைய காலனித்துவ இந்தியப் பெருங்கடல் வரலாறு மற்றும் தொல்லியல் கருத்தரங்கு
பெருங்கடல் வள மையம், மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய ஆய்வுகள் நிறுவனம் (MAKAIAS), இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், புதுச்சேரி அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறை, சுற்றுலாத் துறை, ஆகியவை இணைந்து "அரிக்கமேடு ஒரு பிந்தைய காலனித்துவ இந்தியப் பெருங்கடல் வரலாறு மற்றும் தொல்லியல்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மேடையில் பேசியதாவது:
அரிக்கமேடு குறித்து புதுச்சேரியில் இருக்கும் பலருக்கு தெரியுமா என்பது சந்தேகம். இதன் சிறப்பை அறிந்தோர் குறைவானோர் தான். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் வரலாற்று பூர்வமான மாநிலம். இதில் அடங்கியுள்ள தொன்மையான தொல்லியல் சிறப்பை ஆராய்ந்து வெளியே கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். பண்டை காலத்தில் இருந்து புதுச்சேரியில் வணிகம் நடந்துள்ளதை அறியும் போது புதுச்சேரி நாகரிகத்தை உணர முடிகிறது.
புதுச்சேரியில் இருந்து நூலை துணிக்காக அக்காலத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளோம். அரிக்கமேட்டை ஆராய ஆராய்ச்சியாளர்கள் எடுத்துள்ளனர். அரிக்கமேடு கண்டறியும் முன்பு புதராக இருந்தது. நான் இன்னும் அந்த இடத்துக்கு செல்லவில்லை. சிறந்த அளவுக்கு கொண்டு வரவேண்டும். அது பெரிய அளவுக்கு வரவில்லை. சுற்றுலாப் பயணிகள் பார்த்து அறியும் அளவுக்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. பழமையான கட்டடங்களை வைத்து சுற்றுலாவை வெளிநாட்டில் மேம்படுத்துகின்றனர்.
அரிக்கமேடு
அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து உரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.
புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து அங்கு செல்ல விரும்புபவர்கள் கடலூர் சாலை வழியாக அரியாங்குப்பம் சென்று அங்கிருந்து வீராம்பட்டினம் செல்லும் சாலையில் "காக்காயந்தோப்பு" என்னும் சிற்றூருக்குச் செல்லவேண்டும். அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது.
அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது.
இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியர் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.
1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரேஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச்சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும், சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு அவர் பேசினார்.