தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, கஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி,  கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


23.09.2023 மற்றும் 24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, சின்னமலை, சைதேப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழையும், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எம்.ஆர்.சி நகர் அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பூமியின் உஷ்னம் தணிந்து உள்ளது. இந்நிலையில் காலை 10 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


வங்கக்கடல் பகுதிகள்:


21.09.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.


School Holiday: வேலூரில் தொடரும் மழை.. தொடக்க பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!


CM MK Stalin: "சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதுதான் பத்திரிகை தர்மம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்