தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, மேற்கு

    தொடர்ச்சி     மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


நாளை, தமிழக உள்  மாவட்டங்களில்  ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கடலோர மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


நாளை மறுநாள், மேற்கு  தொடர்ச்சி  மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


ஏப்ரல் 21 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதி, தென் தமிழகம் மற்றும்  டெல்டா மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள்  மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.


ஏப்ரல் 23 மற்றும் 24 ஆம் தேதி, தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:


இன்று முதல் 22 ஆம் தேதி வரை அடுத்த இரண்டு  தினங்களில் அதிகபட்ச  வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2°  செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் 2° – 3° செல்சியஸ் சற்றே குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் இன்றும் நாளையும், அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஈரப்பதம்:  வரும் 22 ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்றும் நாளையும், வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ்,  ஈரோட்டில் 41.4° செல்சியஸ்,  திருச்சியில் 40.6° செல்சியஸ், வேலூரில் 40.5° செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.


இதர  தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது.


தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 22° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 38.3° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


நாளை மற்றும் 20 ஆம் தேதி, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.