கரூர் அருகே அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை தொடங்கியது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தில் உள்ள சொகுசு பங்களா வீட்டில் சோதனை நடந்து வருகிறது.


கரூரில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை ஏழாவது நாளாக இன்றும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 


 




கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான "சங்கர் ஃபார்ம்ஸ்" பண்ணை வீட்டில் வருமான வரி சோதனை தொடங்கியது.


இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாந்தோப்புடன் கூடிய 4000 சதுரடி அளவு பங்களா வீடும், நீச்சல் குளமும் இருப்பதாகவும், முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தளிப்பதற்காக இந்த பண்ணை வீடு பயன்படுவதாக கூறப்படுகிறது.


 




 


ஏற்கனவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான அலுவலக பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண