திருப்பூர் பனியன் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் தீயில் எரிந்து நாசமாயின. 


திருப்பூர் காதர்பேட்டையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. அதையடுத்து அது அடுத்தடுத்து கடைகளுக்கு பரவியது. சற்றும் எதிர்பாராமல் அந்த பகுதியில் இருந்த 50 கடைகளில் தீப்பற்றி எரிந்தது. 


இதில் கடைகளில் இருந்த ஏராளமான ஜவுளிகள் தீயில் எரிந்து நாசமாயின. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.