தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு அறிவித்த நிலையில், சென்னை எழிலகத்தில் மழை பாதிப்பு நிலவரம் குறித்து  பேரிடம் வேளாண்மைத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.


அப்போது பேசிய அமைச்சர், “சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடம் மீட்புப் படை என 15 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 10 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த, தாழ்வான பகுதிகளில் வசித்த 2,859 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.


மேலும், தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.




முன்னதாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது. கடந்த 6 மணி நேரத்தில் 16 கிலோ மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதே நிலையில் நகர்ந்து செல்லும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும்” என்றார்.


சென்னைக்கான ‘ரெட் அலர்ட்’ விலகியது


சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண