IPS Transfer: தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேற்குமண்டல ஐ.ஜி. ஆக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:



  • சிபிஐ சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி., ஆக இருந்த சைலேஷ் குமார் யாதவ், காவலர் வீட்டு வசதி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • சிபிஐ சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த தினகரன், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • மேற்குமண்டல ஐ.ஜி., ஆக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

  • மேற்குமண்டல ஐ.ஜி. ஆக இருந்த பவானீஸ்வரி, காவல்துறை மேம்பாட்டு பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • காவல்துறை மேம்பாட்டு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • மாநில மனித உரிமைகள் ஆணைய ஐ.ஜி., ஆக இருந்த மஹேந்திர குமார் ராதோட், சமூக நீதி & மனித உரிமைப்பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்

  • சமூக நீதி & மனித உரிமைப்பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த சாமூண்டீஸ்வரி, சட்டம் & ஒழுங்கு ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார்

  • சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த  செந்தில்குமாரி குற்றப்பிரிவு ஐ.ஜி., ஆக நியமனம்

  • நெல்லை ஆணையராக இருந்த மூர்த்தி நெல்லை சரக டி.ஐ.ஜி., ஆக நியமனம்

  • சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணயராக பிரவேஷ்குமார் நியமனம்

  • வேலூர் சரக டி.ஐ.ஜி., ஆக தேவராணி நியமனம்

  • சென்னை பெருநகர கிழக்கு இணைய ஆணையராக சரோஜ்குமார் தாக்கூர் நியமனம்

  • காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி., ஆக நஜ்முல் ஹூடா நியமனம்

  • அபிஷேக் தீக்‌ஷித் சென்னை ரயில்வே டி.ஐ.ஜி., ஆக நியமனம்

  • அபினவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ஆக நியமனம்

  • ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ஆக இருந்த துரை, காவலர் நல்வாழ்வு பிரிவு டி.ஐ.ஜி., ஆக நியமனம்