தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 260, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 16  பேர் என 4 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 85 ஆயிரத்து 281 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 4 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 15  ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது.




 


 


 


சென்னையில் 1,500-ஐ தாண்டியது


சென்னையில் ஏற்கெனவே ஆயிரத்து 459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக  இன்று 19 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. 




 


 


சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,000-ஐ தாண்டியது


 


தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 869 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.