கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சில நாட்களாக குறைந்து வந்த நீர் வரத்து இன்று சற்று அதிகரித்துள்ளது, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.00 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4,934 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 4,171 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 4,379 கன அடியாக உயரத் துவங்கியுள்ளது. நீர் இருப்பு 31.84 டி.எம்.சி ஆக குறைந்து உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 4,193 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,483 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோன்று கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,934 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 4,171 கன அடியாக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில். நிலையில்லாத நிறுவனத்தால் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிக்கும் சரிந்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.