கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக சில நாட்களாக அதிகரித்து வந்த மேட்டுர் அணையின் நீர் வரத்து மீண்டும் சரியத் துவங்கியுள்ளது, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.99 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 620 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 8,789 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 6,553 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 29.35 டி.எம்.சி ஆக குறைந்து உள்ளது.
கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 63.96 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5,417 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் மட்டம் 119.94 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 7,020 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8,789 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 6,553 கன அடியாக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில்,
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.