தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் புதன் கிழமைகளில் வார சந்தை நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற வாரச்சந்தையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய வார சந்தையில் சுமார் 2 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் இன்றைய சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்தது. இன்றைய சந்தைனில் ஆடு விலை 5000 முதல் 25,000 வரை விற்பனையானது. இன்றைய சந்தையல் சுமார் 2000 ஆடுகள், சுமார் 30 லட்சத்திற்கு விற்பனை ஆனது. மேலும் 700 மாடுகளை வந்திருந்தது. இதில் வளர்ப்பு மாடுகள் 7,000 முதல் 15000 வரையிலும், பால் மாடுகள் 25000 முதல் 50,000 வரை விற்பனையானது. மேலும் கேரளா ஏற்றுமதி குறைவாக இருப்பதால், சுமார் 25 லட்சத்திற்கு மட்டுமே மாடுகள் விற்பனையானது.

 



 

 

மேலும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க கண்களை கவரும்  வகையில், புதிய வகைகளில் வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு,  குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாயபட்டி, சாட்டை  ஆகிய அலங்கார பொருட்களை வார சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு  இன்னும் ஒரே ஒரு சந்தை இருப்பதால், அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் விலை அதிகரிக்கும் என்பதால், இந்த வாரமே விவசாயிகள் அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் அடுத்த வாரம் போகி பண்டிகை நாளில் சந்தை வருவதாலும், இந்த ஆண்டு மழை பெய்துள்ளதால், கடந்த ஆண்டை விட, விற்பனை மற்றும் வருவாய் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

 



 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மன்கீ பாத் நிகழ்ச்சியை வானொலியில் கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

எப்பொழுதும் பொங்கலுக்கு முன்னதாக நடைபெறும் வார சந்தையில் ரூ. 2 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், இன்றைய சந்தையில், சுமார் 60 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் கொரோன பொதுமுடக்கத்திற்கு பின், கடந்த ஓராண்டுக்கு பின் ரூ.60 இலட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த வாரம் பொங்கல் சந்தை என்பதால், ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கடலூரில் 21.5 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்