சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது உள்ளிட்ட விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தி, சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் ஹெல்மெட் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலை பேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது மற்றும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது உள்ளிட்டவைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மனஅளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். சேலம் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார். முன்னதாக, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுழலும் வகையிலான விழிப்புணர்வு ஹெல் மெட் மாதிரி இயக்கத்தை கலெக்டர் கார்மேகம், தொடங்கிவைத்து பார்வையிட்டார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.