சேலம்: மேட்டூர்  அணையில் இருந்து வினாடிக்கு, 22,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில், 22,100 கனஅடி நீர் பாசனத்துக்கும், 7,900 கனஅடி நீர் உபரியாகவும் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர்  அணையில் இருந்து வினாடிக்கு, 22,500 கனஅடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 29ல் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22,500 கன அடியாக சரிவு. கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30,250 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,500 கன அடியாக சற்று குறைந்துள்ளது. நீர் வரத்து சரிந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 22,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
 
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 250கன அடியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. இரு நாட்களாக அணை நீர்வரத்து, திறப்பில் ஒரே நிலை நீடித்தது.

 ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 18-வது நாளாக தடை

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து நேற்றும் நிலவரப்படி 28 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.