சேலம் : மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 31,000 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியன. பின்னர், அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதையடுத்து, காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த ஜூன் 29-ம் தேதி மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை 44வது முறையாக எட்டியது. பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர், நீர்வரத்து அதிகரித்ததால், நடப்பாண்டில் ஜுலை 5-ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. பின்னர், மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 18,610 கன அடியாகவும், நேற்று முன்தினம் மாலை 28,784 கன அடியாகவும் இருந்த நிலையில் நேற்று காலை 31,500 கன அடியாக அதிகரித்தது. நடப்பாண்டில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை 3வது முறையாக நேற்று காலை 8 மணிக்கு எட்டியது. கடந்தாண்டை போல், நடப்பாண்டிலும் 3 முறை அணை நிரம்பியதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் நேற்று காலை 8 மணி முதல் காவிரி ஆற்றில் 31,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி வீதமும், 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 8,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலையில் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவித்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். கா்நாடகம், கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கா்நாடக மாநில அணைகளான கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால் காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து நீா் திறப்பு அதிகரிப்பு மற்றும் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீா்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்த நீா்வரத்து தற்போது வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பால் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பரிசல் இயக்கவும், அருவிகளில், கரையோரப் பகுதியில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். நீா்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காவிரிக் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வாசிப்போா் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.