சேலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ் சகோதரர் தனபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கோடநாடு கொலைவழக்கு பற்றி 2017 ஆம் ஆண்டிலிருந்தே தவறுகளை பற்றி கூறிக்கொண்டு தான் இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நபர் ஒருத்தரை வைத்து பேரம் பேச வருகை தந்தார். கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம், எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். பணத்திற்கு ஆசைப்படுவானாக இல்லை. கோடநாட்டில் நடந்த உண்மை வெளிவர வேண்டும். இதை தடுக்க கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த முக்கியபுள்ளி மூலம் பேரம் பேச வந்தார். பேரம் பேசவேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டேன்.



எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்சனை கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும் என் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும், கருத்து வேறுபாடு கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல் பேரில், தாரமங்கலம் ஒன்றிய கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து கோவையில் சிபிசிஐடியில் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக அடுத்தநாளே சம்மன் அனுப்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது, நாட்கள் கடந்து போகபோக, நீர்த்து போய் வருகிறது என்றார். கோடநாடு வழக்கு தொடர்பாக அப்போதைய விசாரணை அதிகாரி, ஐஜி சுதாகர் மற்றும் சேலம் எஸ்பி யாக இருந்த இருவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு விலை போய்விட்டனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான், என்னை கடுமையாக தாக்கினர்.



கோடநாடு வழக்கில் எவ்வளவு பணம் வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னதாக கூறி பேரம் பேசினர். எடப்பாடி பழனிசாமி பற்றி பேசவேண்டாம் என்று கூறி வந்தனர். 


எடப்பாடி பழனிசாமியால் தான் எனக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக எனது மனைவி, இரண்டு பெண் குழந்தை உள்ளது. தந்தை இல்லாமல் போனால் என்னவாகும் என்று தான் எனது மனைவி பயப்படுகிறார். கோவையில் சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகி அனைத்து உண்மைகளும் சொல்கிறேன். மேலும் புகார் கொடுக்க தயாராக இருக்கிறேன். எனது மனைவி வைத்து புகார் கொடுப்பதால் தன்னை காவல்துறை கைது செய்துவிடும், பின்னர் கோடநாடு வழக்கில் விசாரணையில் ஆஜராகாமல் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.