கேரளா, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து  உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று நண்பகல் நிலவரப்படி வினாடிக்கு இந்த இரண்டு அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து  வினாடிக்கு 72,964 கன அடியாகவும் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 38,00 கன அடி என மொத்தம் 1,10,964 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுலுக்கு  தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. 

 



 

இன்று காலை காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நேற்று மாலை வினாடிக்கு சுமார் 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 43,00,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. தொடர்ந்து வினாடிக்கு 60000 கன அடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை மேலும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளை மூழ்கடித்து வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. 

 

 


 

மேலும், நீர்வரத்து படிப்படியாக உயரும் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஒகேனக்கல் சுற்றுலா தளததில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்தார். மேலும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செல்ல கூடாது எனவும், ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை ஆற்றுப்பக்கம் அனுப்பவவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும் நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கலில் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தொடர்ந்து ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார்கொட்டாய், ஒகேனக்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையோர பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் கண்காணித்து அளவீடு செய்து வருகின்றனர். 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண