சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருந்து கிடங்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேலம் மருந்து கிடங்கில் இருக்கும் மருந்து இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில், உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை என்றும் மருந்துகள் பொதுமக்களே வாங்க சொல்லும் அவலம் உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது. எந்தெந்த மருந்துகள் தட்டுப்பாடு என்று கூறியிருந்தாரோ? அதற்கான இருப்பு குறித்தும், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்களை வாங்கி வர சொல்லக்கூடாது எனவும், அதை மருத்துவர்களே வாங்கித் தர வேண்டும் என்று சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். எந்தவித குழப்பம் இல்லாமல் சீராக சென்று கொண்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி



சேலம் அரசு மருத்துவமனை பொதுமக்களை வாங்க சொல்வதாகவும், மருந்துகளை இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அவரது அறிக்கை உண்மைத்தன்மை என்னவென்று தற்பொழுது தெரிவிக்கிறோம். சேலம் மருந்து கிடங்கை பொறுத்த வரை பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார நிலையம், மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் அனுப்பப்பட்டு வருகிறது. மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகள் தற்பொழுது இருப்பு இருந்து கொண்டுள்ளது. ஒரு சில மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு, வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அதை மருத்துவர்கள் வாங்கிக் கொள்ளும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய ஞானோதயம் பிறந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.



மேலும், மருந்துகள் இருப்பு குறித்து சந்தேகம் இருக்குமானால் மருந்து கிடங்கு மற்றும் மருத்துவமனையில் நேரில் வந்து ஆய்வு செய்யலாம், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து எடப்பாடி பழனிசாமி இந்த மருந்துகள் இல்லை என்று அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் இருந்தால் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கிடங்குகளில் நேரில் வந்து ஆய்வு செய்யலாம். அவர் ஆய்வு செய்வதற்கு அனுமதி தருகிறோம் வழக்கு எல்லாம் போடமாட்டோம் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் கூறியபடி


டி.என்.எம்.எஸ்.சி இழுத்து மூடுவதற்கு தேவையில்லை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததையும், யார் எழுதிக் கொடுப்பதை கூறி வந்தால் சொல்வதற்கு இல்லை என்றும் கூறினார். ஏற்கனவே உள்ள 32 மருந்து கிடங்குகள் மற்றும் புதிதாக 5 மருந்து கிடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை பத்து மாதங்களில் செய்து முடித்துள்ளோம். பொதுமக்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றார்.


ஒரே வீட்டில் 10 க்கும் மேற்பட்ட தாய் மார்களை வைத்து வாடகைக்கு தாயாக பயன்படுத்தி குழந்தை பெற்ற விவகாரம் குறித்த கேள்விக்கு, அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. தனிமனித உரிமை மற்றும் தாய்மார்கள் உரிமை கற்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படும் என்றார். மேலும் நடிகை நயன்தாரா விவகாரத்தில் முழுமையான விசாரணை அறிக்கை கையில் கிடைத்தவுடன் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது. விதிமுறைகள் சட்டத்திற்கு உட்பட்டதா என்பது குறித்து முறையாக அறிக்கை கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு காரணம். 2024 மே மாதத்திற்காக நடைபெறுகின்ற நாடகம் எனவும் பேசினார்.


ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் உடன்யிருந்தனர்.